“அவர் உயிருடன் இருந்த போது நிச்சயமாக இந்த சம்பவத்தை வெளியே சொல்ல அனுமதித்திருக்கமாட்டார். அவர் மறைந்து விட்ட சூழலில், இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், வரலாற்றுக்கு மிகப்பெரும் துரோகம் செய்தவனாவேன். தோழர்கள் மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த சம்பவத்தைப் பகிர்கிறேன்.”
- ராணா மித்ரா
அது ஏப்ரல் 2022 கோடைகாலமாக இருக்கும் என நினைக்கிறேன். திடீரென எனக்கு பாசுதா (பாசுதேவ் ஆச்சார்யா)விட மிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
தோழர் ராணா, நீங்கள் இன்று கொல்கத்தாவில் இருக்கிறீர்களா?
“ஆமாம் தோழர்” என நான் பதிலளித்தேன். அப்படியானால் கொல்கத்தா ராய்ட் தெருவிலுள்ள நபார்ட் அலுவலகத்துக்குப் பின்னால் இருக்கும் இந்திய உணவு கழக அலுவலகத்துக்கு மதியம் நான் வரக்கூடும். அதன் பொது மேலாளருடன் எனக்கு ஒரு அவசர சந்திப்பு உள்ளது. நீங்கள் என்னுடன் இருப்பீர்களா?”
“நிச்சயமாக” என்றேன் நான்.
நான் உடனடியாக தோழர் சாகரையும், மிலனையும் அழைத்துக் கூறினேன், “தோழர் பாசுதா புருலியாவிலிருந்து ஒரு அவசரச் சந்திப்பில் பங்கேற்பதற்காக எஃப்.சி.ஐ. அலுவலகம் வருகிறார். நாம் தேநீர் குடித்து முடித்ததும், அவர் எழுந்து, “நாம் எஃப்.சி.ஐ. அலுவலகத்துக்குப் போக லாம்!” என்றார்.அவருடன் இருக்க வேண்டும்.”
கூறியபடி, அவர் அந்தக் கடும் கோடை வெப்பத்தில் புருலியாவிலிருந்து வந்தார் – தனியாகத் தனது ஓட்டுநரை மட்டும் கூட்டிக் கொண்டு வந்தார். அவர் மிகவும் தீவிரமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். காரிலிருந்து இறங்கிய போது அவர் நடுங்கிக் கொண்டி ருந்தார், கால்கள் தடுமாறின. “என் உடல்நிலை சரியாகவே இல்லை, எனது ரத்தத்தில் சர்க்கரை அளவு பிரச்சனைகளை உருவாக்குகிறது.”.
நாங்கள் அவரை உடனடியாக எங்கள் அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த நபார்ட் விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றோம். (நாங்கள் அதை ஏற்கனவே புக் செய்து வைத்திருந்தோம்.) “பாசுதா, நீங்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. இங்கு சிறிது நேரம் ஓய்வெடுங்கள், சிறிது உணவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று நான் கூறினேன்.\
“சர்க்கரை இல்லாமல் ஒரு கப் கட்டாஞ்சாயா” என்று பாசுதா வலியுறுத்தினார். எங்கள் வலியுறுத்தலால் இரண்டு கிரீம் கிராக்கர் பிஸ்கெட்டுகளை கட்டாஞ்சாயாவுடன் எடுத்துக் கொண்டார். ஓய்வு?
தேநீர் குடித்து முடித்ததும், அவர் எழுந்து, “நாம் எஃப்.சி.ஐ. அலுவலகத்துக்குப் போக லாம்!” என்றார்.
“பாசுதா, உங்கள் உடல்நிலை சரியில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனினும் கூட நீங்கள் இன்று புருலியாவிலிருந்து கொல்கத்தாவுக்குப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறீர்கள். சில நாட்கள் உங்கள் பயணத்தைத் தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா?” என்று நான் அவரிடம் கேட்டேன்.
அவரது குணாம்சமான அமைதியுடன் பாசுதா பதிலளித்தார், “இல்லை தோழர் ராணா. அது முடியவே முடியாது. புருலியா ரயில்வேயில் கனமான சிந்தடிக் சாக்குகளை இறக்கிக் கொண்டிருந்த போது சில சாக்குகள் விழுந்து ஒரு தினக்கூலித் தொழிலாளி இறந்துவிட்டார். அவருக்கு ஆதரவற்ற ஏழை மனைவியும், குழந்தையும் புருலியாவில் உள்ளனர். அவர்கள் தினக்கூலிக்காரர்கள் என்பதால் வழக்கமாக எஃப்.சி.ஐ. இந்த மரணங்களுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. அவரது மனைவி மிகவும் கடுமையாக அழுது கொண்டு நான் எஃப்சி.ஐயிலிருந்து எதாவது உதவி வாங்கித் தர முடியுமா என்று கேட்டு என்னை அணுகினார்.”
கற்பனை செய்யுங்கள், ஒரே ஒரு தனி தினக்கூலித் தொழிலாளி துரதிர்ஷ்டவசமாக எஃப்.சி.ஐ.யில் ஒரு விபத்தில் இறந்து விட்டார். பாசுதா புருலியாவிலிருந்து ஆதரவற்ற அந்தக் குடும்பத்துக்கு எதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பதற்காக கொல்கத்தாவுக்கு விரைந்து வந்துள்ளார். (அந்தத் தொழிலாளியின் பெயர் மகா மாஜி என்று பின்னர் கேள்விப் பட்டோம். அவர் புருலியாவின் பலராம்பூரில் விபத்தில் இறந்தார்.)
எனவே நபார்டிலிருந்து நாங்கள் மூவரும் அலுவலகத்துக்குப் பின்னால் இருந்த எஃப்.சி.ஐ.அலுவலகத்துக்குச் சென்றோம். பாசுதாவைப் பார்த்ததும், எஃப்.சி.ஐ.யின் பொது மேலாளர் அவரைத் தனது அறைக்கு வர வேற்றார். நாங்கள் மூவரும் அருகில் இருந்த தனிச் செயலாளர் அறையில் காத்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து பாசுதா பொது மேலாளர் அறையிலிருந்து வெளியே வந்தார்.
எந்த உணர்ச்சியையும் காட்டாத பாசுதா வின் அதே முகம்; எனினும் எங்களால் அவரது முகத்தில் சிறிது பிரகாசத்தைப் பார்க்க முடிந்தது. அவர் உடனடியாக எங்களிடம் கூறினார் “உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. விஷயம் முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது. பொது மேலாளர் அந்த ஏழைக் குடும்பத்துக்கு சிறிது பணமும், நிவாரணமும் அளிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்போது நாம் போகலாம்.”\நபார்டுக்குத் திரும்பும் வழியில் அவர் நடுங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். அவரைத் தொட்டுப் பார்த்த போது அவருக்குக் காய்ச்சல் இருப்பது தெரிந்தது. நாங்கள் கூறினோம், “பாசுதா, நாங்கள் இந்த உடல்நிலையுடன் புருலியாவுக்கு இன்று திரும்புவதற்கு அனுமதிக்க மாட்டோம். நீங்கள் இன்று நபார்ட் விருந்தினர் அறையில் ஓய்வெடுங்கள். எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் உங்களைக் கவனித்துக்கொள்வோம்.
எனினும் அவரது வழக்கமான சிறு புன்னகையுடன் அவர் கூறினார், “ஓ, முடியாது. இந்த வகை நோயால் நான் அடிக்கடி துன்பப் படுகிறேன். மிக வேகமாக நான் சரியாகி விடு வேன். சிறிது ஓய்வெடுத்தால் நான் சரியாகி விடுவேன்.”
அவர் வந்து எங்கள் விருந்தினர் இல்லத்தின் வாசலில் ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டார். அருகிலிருந்த எக்சிகுடிவ் அறைக்குச் செல்ல மறுத்து விட்டார். மீண்டும் அவர் ஒரு தேநீரும் ஒரு கிரீம் பிஸ்கெட்டும் எடுத்துக் கொண்டார்.
அவர் முக மலர்ச்சியுடன் கூறினார், “பாருங்கள், நான் இங்கு வந்தது அந்த ஆதர வற்ற ஏழைக் குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் வராமல் இருந்திருந்தால், அந்தக் குடும்பம் பட்டினியால் துன்புற்று இருக்கும்!” நாங்கள் பேச்சற்றுப் போனோம்.
ஒரு தினக் கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பத்துக்காக, அவர் இவ்வளவு அன்பும் கருணையும் காட்டி, தனது உடல் நிலையையும், பாதுகாப்பையும் தூக்கியெறிந்திருக்கிறார்! இதை எப்படி விளக்குவது? வெறும் வர்க்க உணர்வு? தொழிலாளர்கள், ஏழைகள் மீது அப்பழுக்கற்ற, தூய்மையான அன்பு? ஒரே ஒரு ஏழைக்காக, இந்த மோசமான உடல்நிலை யுடன் புருலியாவிலிருந்து கொல்கத்தா வுக்குப் பயணம் செய்வதைத் தூண்டும் வகை யில் அவரது இதயத்தில் எவ்வளவு அன்பை அவர் வளர்த்தெடுத்திருக்க வேண்டும்? யாருக்கும் தெரியாது. தொலைபேசியில், முக நூலில், சமூக ஊடகங்களில் எந்த விளம்பர மும் கிடையாது, மாலையில் தொலைக்காட்சி யில் முகத்தையும் காட்டவில்லை. அவரது “வர்க்கத்துக்கு” அப்பழுக்கற்ற அன்பு மட்டுமே.”
சிறிது நேரம் கழித்து அந்த அன்பு மனிதர் எழுந்து கூறுகிறார். “என் அருமைத் தோழர்களே ராணா, சாகர், மிலன், கவலைப் படாதீர்கள். நான் இன்றே புருலியா திரும்பியாக வேண்டும். ஒரு அவசர வேலை இருக்கிறது. நாளை எனக்காக அங்கு சிலர் காத்திருப்பார் கள்.”
அவர் நடக்கிறார்.. கொஞ்சம் ஓய்வுக்குப் பிறகு சிறிதே முன்னேற்றம் தெரிகிறது. நாங்கள் மூவரும் அவரைக் காருக்கு அழைத்துச் சென்றோம்… அவர் எங்களுக்குக் கையாட்டி விடை பெற்றார், மீண்டும் எங்களுக்கு நன்றி சொல்கிறார். (யார் யாருக்கு நன்றி சொல்வது!) ஆம், கிளம்புவதற்கு, முன் சொல்கிறார், “ராணா, தயவுசெய்து நபார்ட் விஷயங்கள் பற்றி நாம் இன்று பேசியவை குறித்து எனக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டிருங்கள். என்னால் எதுவும் உதவ முடியுமானா, தயங்க வேண்டாம். நான் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமலிருக்கலாம். எனினும் தேவைப்பட்டால், நான் உங்களை தில்லிக்கு அழைத்துச் சென்று முன்பு போல் ஒன்றிய நிதியமைச்சரிடம் பேசச் செய்வேன்.! “அந்தக் கனிவான மனிதர் நம்மிடமிருந்து மறைந்துவிட்டார்….
மார்க்சியத்தை நடைமுறைப்படுத்தியவர் (ஆம், நான் அந்தச் சொல்லை தெரிந்தேதான் பயன்படுத்துகிறேன்.) நம்மிடமிருந்து விடை பெறுகிறார்... திடீரென, ஒரு மின்னல் வெட்டில், தோழர் அய்ஜாஸ் அகமது தோழர் விஜய் பிரசாத்துடன் “பொலிடிகல் மார்க்ஸ்”இல் விவாதிப்பது தோன்றுகிறது!
“உலகை மாற்ற செயல்படாமல் அதனை அறிவதை மட்டுமே செய்வது தூய்மையான லட்சியவாதம். மார்க்ஸ் வரலாற்றிலும், வர லாற்றின் மீதும் செயல்படுவதன் மையத்தைக் காண்கிறார். நடைமுறைப்படுத்துவது என்பது அறிவாற்றலின் மையம்...”!
(பொலிடிகல் மார்க்ஸ், லெஃப்ட்வேர்ட் பக்.18)
பாசுதா பொலிடிகல் மார்க்சைப் படித்து விட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக அவர் மார்க்சை படித்திருக்கிறார். அவர் அதன் சாரத்தையும், மையக்கருவையும் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் வர்க்க செயல்பாட்டில் மார்க்சின் படிப்பினைகளை ஸ்தூலமான நிலைமைகளில் தானே தூவ வேண்டும்…
மார்க்சியப் படிப்பினைகளை நடைமுறைப் படுத்திய இணையற்ற இந்த மனிதருடன் தொடர்பில் இருந்து சில மைல்கள் நடக்க முடிந்ததற்காக நம்மை அதிர்ஷ்டசாலிகளாக நாம் கருத வேண்டும்.
பாசுதா நீடூழி வாழ்க... செவ்வணக்கம் பாசுதா!
- ராணா மித்ரா
பொதுச்செயலாளர், அகில இந்திய நபார்ட் ஊழியர் சங்கம். (17-11-2023)
- தமிழில் : கி.ரமேஷ்